நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு..!

நேபாளத்தில் உள்ள பக்தாபூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-06-10 22:04 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நேபாளத்தில் உள்ள பக்தாபூர் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளம், பக்தாபூர் சங்குநாராயண் கோயில் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்