பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Update: 2022-11-17 05:35 GMT

இஸ்தான்புல்

துருக்கி நாட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் 8658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.

துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66) அவர் மதபோதகராக கருதப்பட்டார். ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். அக்தார் பழமைவாத கொள்கைகளை ஆதரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிளுடன் இருந்தார்.

அவருக்கு கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் மோசடி மற்றும் இராணுவத்தில் உளவழங்கப்பட்டு இருந்தது.தற்போது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உள்ளது.நீதிமன்றம் மேலும் 10 குற்றவாளிகளுக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்