பொருளாதார நெருக்கடியால் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி : இத்தாலி பிரதமர் ராஜினமா

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.;

Update:2022-07-21 16:36 IST

Photo Credit: AFP

ரோம்,

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், பிரதமருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனைக் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

அதேவேளையில், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். இதனால், அந்நாட்டில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத்தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்