நன்மை தரும் நரசிம்மர் வழிபாடு

தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தி வந்த இரண்யனை, நரசிம்ம அவதாரம் எடுத்து திருமால் அழித்தார்.

Update: 2018-04-13 06:13 GMT
இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப் பிறகு, ஸ்ரீமன் நாராயணனிடம் வந்து தங்களுக்கு நரசிம்ம திருக்கோலத்தை காட்டியருளும்படி வேண்டினர்.

அதற்கிசைந்த பெருமாள், நரசிம்ம அவதாரத்தை அவர்களுக்குக் காட்டி அருளினார். அவ்வாறு நரசிம்ம அவதாரத்தை முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் தமிழகத்தில் எட்டு இருக்கிறது. அவை சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்களாகும்.

நமது ஆன்மிகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர், பகவான் நரசிம்மர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவரும் இவரே. மேலும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தாக்கத்தை மாற்ற, நரசிம்மர் வழிபாடு நன்மை அளிப்பதாக அமையும்.

மேலும் செய்திகள்