திருப்பதியில் பாஷ்யகார உற்சவம் தொடங்கியது

ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும்.

Update: 2024-05-03 08:43 GMT

ராமானுஜர் பிறந்த சித்திரை மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தை (திருவாதிரை) முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலையில் பாஷ்யகார உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாஷ்யகார உற்சவம் இன்று தொடங்கியது. வரும் 21-ம்தேதி வரை மொத்தம் 19 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக, ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளான 12-ம் தேதி பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். அன்று மாலை சகஸ்ரதீபலங்கார சேவைக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமியும், ராமானுஜரும் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்