இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள துவரம்பாடு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் துவரம்பாடு, இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, தெற்கு ஏறந்தை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருவிளக்கு ஏற்றி அம்மனை வாழ்த்தி பாடல்கள் பாடினார்கள். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.