இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய இளையோர் அணி 388 ரன்கள் குவிப்பு

இந்தியா – இங்கிலாந்து இளையோர் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நாக்பூரில் நடந்து வருகிறது.

Update: 2017-02-23 22:45 GMT

நாக்பூர்,

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 375 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3–வது நாளான நேற்று 9 விக்கெட்டுக்கு 388 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சவுரப் சிங் (109 ரன்) சதம் அடித்தார். 13 பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்