கழுத்தின் மேல் தொங்கும் கத்தி; கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், ‘மற்ற நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வந்து விளையாடி தோல்வி அடைந்து தாயகம் திரும்பினால், அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினை எதுவும் வராது.

Update: 2017-05-24 21:45 GMT

மும்பை,

ஆனால் இந்திய அணி வெளிநாட்டில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அதன் பிறகு நிலைமை கழுத்தின் மேல் கத்தி தொங்குவது போன்றது தான். விமர்சனங்களால் துளைத்தெடுத்து விடுவார்கள்’ என்றார்.

‘‘எந்த ஒரு ஆட்டத்திலும் தோற்காமல் கோப்பையை வெல்ல விரும்புகிறோம். அதற்கு எங்களது ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே பிரமாதமாக ஆட வேண்டும்’’ என்றும் கோலி கூறினார்.

மேலும் செய்திகள்