20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணியை வென்றது டெல்லி

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் சூப்பர் லீக்கில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி, நேற்று டெல்லி அணியை சந்தித்தது.

Update: 2018-01-21 20:45 GMT
கொல்கத்தா,

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் சூப்பர் லீக்கில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி, நேற்று டெல்லி அணியை சந்தித்தது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விஜய் சங்கர் 57 ரன்கள் எடுத்தார். இந்த எளிய இலக்கை டெல்லி அணி 15.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 58 ரன்கள் (33 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் உத்தரபிரதேசத்துடன் நாளை மோதுகிறது.

மேலும் செய்திகள்