ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2018-04-11 01:07 GMT
மும்பை,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போது சீரான உறவு இல்லாததால், இந்தியாவில் போட்டியை நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றி இருக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் ஜெயிக்கும் அணி என்று மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும்.

மேலும் செய்திகள்