காரைக்குடி காளையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-09 17:50 GMT
கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

138 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய காரைக்குடி காளை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை எடுத்தது. கோவை கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்