விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் வெற்றிபெற்றன.

Update: 2018-09-21 21:45 GMT


விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் (ஏ பிரிவு) நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மும்பை- கர்நாடகா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது கேப்டன் ரஹானே 148 ரன்களும் (13 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 110 ரன்களும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினர். தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி 45 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னையில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-சர்வீசஸ் (சி பிரிவு) அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 133 ரன்களும் (130 பந்து, 17 பவுண்டரி), அபினவ் முகுந்த் 69 ரன்களும், பாபா இந்திரஜித் 76 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய சர்வீசஸ் அணி 46 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் மூலம் தமிழக அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


மேலும் செய்திகள்