இங்கிலாந்து - இலங்கை ஒரு நாள் போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

Update: 2018-10-10 21:22 GMT
தம்புல்லா,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

மேலும் செய்திகள்