இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு 299 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

Update: 2019-01-15 07:25 GMT
அடிலெய்டு, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று  அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ்  131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ,ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மேலும் செய்திகள்