இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு 299 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அடிலெய்டு,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ,ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.