எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் -சச்சின் தெண்டுல்கர்

உலகக்கோப்பையில், எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக இந்திய அணியின் பும்ரா இருப்பார் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-05 07:15 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா உருவெடுத்து வருகிறார். இந்நிலையில், பும்ராவின் அபாரமான பந்துவீச்சை பலமுறை அருகில் இருந்து பார்த்திருப்பதால் அவரது வளர்ச்சி குறித்து தனக்கு ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் எனவும் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்