பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் 15–ந் தேதி தொடக்கம்

19 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கு இடையிலான 2–வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

Update: 2019-07-09 21:00 GMT

சென்னை, 

19 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கு இடையிலான 2–வது ஸ்வெலக்ட் செரினிடி கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி 4 மைதானங்களில் நடக்கிறது. இதில் சென்னையில் இருந்து 14 அணிகளும், கோவை மற்றும் மதுரையில் இருந்து தலா ஒரு அணிகள் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 ஓவர்கள் அடிப்படையில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி 90 ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 7 மற்றும் 8–ந் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த தகவலை போட்டி அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஷியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்