டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : காஞ்சி வீரன்ஸ் 150 ரன்கள் சேர்ப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Update: 2019-07-21 15:35 GMT
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும்  காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான விஷால் வைத்யா 1 ரன்னிலும், முகிலேஷ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர். 

பின் ஜோடி சேர்ந்த சுரேஷ் லோகேஸ்வர் மற்றும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பாபா அபராஜித் 29 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சஞ்சய் யாதவ், சுரேஷ் லோகேஸ்வர் உடன் கைக்கோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. இதில் சஞ்சய் யாதவ் 31 ரன்னிலும், அரைசதம் அடித்த சுரேஷ் லோகேஸ்வர் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் சற்று அதிரடி காட்டிய பிரான்சிஸ் ரோக்கின்ஸ் 25 ரன்னில் கேட்ச் ஆனார்.

இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில்  சதீஷ் 7 ரன்னுடனும், ஹரிஷ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கோவை கிங்ஸ் அணியில் மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், விக்னேஷ் 1 விக்கெட்டும்   வீழ்த்தினர்.

இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்