டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது. மேலும் மழையின் காரணமாக ஆட்டம் 20 ஓவர்களிலிருந்து 13 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும், இதுவரை தலா ஒரு போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் கோவை கிங்ஸ் அணி வெற்றியையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோல்வியையும் சந்திதுள்ளது.
எனவே முதல் வெற்றியை பெற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது வெற்றியை பெற கோவை கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது.