டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Update: 2019-07-27 13:52 GMT
நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தலா 2 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் திருச்சி வாரியர்ஸ் அணி இரண்டிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. கோவை கிங்ஸ் அணி 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்