டோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் 42 பந்தில் 65 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்

Update: 2019-08-08 04:56 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஷாட் மூலம்ஆட்டமிழந்ததால் விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில்தான் 3-வது ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் இப்போட்டியில் முத்திரை பதித்ததுடன் எம்எஸ் டோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்  ரிஷப் பண்ட். எம் எஸ் டோனி 20 ஓவர்  கிரிக்கெட் போட்டியில் 56 ரன்கள் அடித்ததே இந்திய விக்கெட் கீப்பரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதைரிஷப் பண்ட் நேற்றைய ஆட்டத்தின் போது இந்த சாதனையை முறியடித்தார்

மேலும் செய்திகள்