200 ரன்கள் அடித்தும் நாங்கள் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் - சுப்மன் கில்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-28 19:41 GMT

Image Courtesy: X (Twitter)

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 16 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 206 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் வில் ஜேக்ஸ் 100 ரன், விராட் கோலி 70 ரன் எடுத்தனர். அதிரடியாக ஆடி சதம் அடித்த வில் ஜேக்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த போட்டியில் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தனர். அடுத்த போட்டியில் நாங்கள் இன்னும் சிறப்பான ஒரு திட்டத்துடன் வரவேண்டும். மேலும் மைதானத்தில் எங்களுடைய திட்டங்களை சரியாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கு திரும்ப முடியும்.

எப்போது பேட்டிங் செய்தாலும் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடிக்க நினைக்க வேண்டும். ஏனெனில் தற்போது வெற்றிக்கான ஸ்கோர் அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் 200 ரன்களை நாங்கள் எடுத்தபோது நிச்சயம் இந்த ரன் குவிப்பு போதும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் எங்கள் வசம் எதுவும் செல்லவில்லை. பெங்களூரு அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்