ஆசிரியர்கள் கல்வியை மட்டுமல்ல, நன்மதிப்புகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்கிறார்கள் - சச்சின் தெண்டுல்கர்
ஆசிரியர்கள் கல்வியை மட்டுமல்லாமல் நன்மதிப்புகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்கிறார்கள் என சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆசிரியர் தினமான இன்று தன்னுடைய பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேக்கர் குறித்து ஒரு பதிவினை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஆசிரியர்கள் கல்வியை மட்டுமல்லாமல் நன்மதிப்புகளையும் சேர்த்து கற்றுக்கொடுக்கிறார்கள். ஆச்ரேக்கர் சார் எனக்கு வாழ்க்கையிலும், களத்திலும் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளார். எனது வாழ்க்கையில் அவர் செய்த மகத்தான பங்களிப்புக்காக நான் எப்போதும் அவருக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். மேலும் அவர் கற்றுக்கொடுத்த பாடம் இன்றும் எனக்கு வழிகாட்டுகின்றன என சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Teachers impart not just education but also values. Achrekar Sir taught me to play straight - on the field and in life.
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2019
I shall always remain grateful to him for his immeasurable contribution in my life.
His lessons continue to guide me today. #TeachersDaypic.twitter.com/kr6hYIVXwt