மெதுவாக பந்து வீச்சு: வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு அபராதம்

மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-12-16 23:10 GMT
சென்னை,

சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. குறிப்பிட்ட கால அவகாசத்தை தாண்டி அந்த அணி 4 ஓவர்களை வீசியது. இது குறித்து நடுவர்கள் அளித்த புகாரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் டேவிட் பூன் விசாரணை நடத்தி வெஸ்ட்இண்டீஸ் அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார்.

மேலும் செய்திகள்