ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: சதம் அடித்தார் ரோகித் சர்மா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார்.

Update: 2020-01-19 14:46 GMT
பெங்களூரு,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் விளையாடி வருகின்றனர்.

காயம் காரணமாக ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர்.

நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா 110 பந்துகளில்,  8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 100 ரன்களை கடந்தார். லோகேஷ் ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி அரை சதத்தை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மேலும் செய்திகள்