சி.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் டிரின்பாகோ

சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டிரின்பாகோ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Update: 2020-09-08 23:35 GMT
டிரினிடாட், 

கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் தொடரில், டிரினிடாட்டில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் ஜமைக்கா தல்லாவாஸ்-டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் அகியல் ஹோசின் 3 விக்கெட்டும், காரி பியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த எளிய இலக்கை டிரின்பாகோ அணி 15 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லென்டில் சிமோன்ஸ் 54 ரன்களுடனும், வெப்ஸ்டெர் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மேலும் செய்திகள்