ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

Update: 2020-10-14 13:54 GMT
துபாய்,

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது

இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.  7 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புதுதெம்பை கொடுத்துள்ளது. 

ஏற்கனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. 

மேலும் செய்திகள்