இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.

Update: 2021-09-12 22:41 GMT
உள்ளூரில், இலங்கை அணி முதலில் பேட் செய்து எடுத்த மோசமான ஸ்கோர் இதுவாகும். தென்ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷம்சி, மார்க்ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 58 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்