டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைத்தார்.
துபாய்,
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57 ரன்கள் விளாசினார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த 10-வது அரைசதம் இதுவாகும்.
இதன் மூலம் கோலி புதிய சாதனையை படைத்தார். 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 9 அரைசதம் அடித்திருந்தார். இந்த சாதனையை கோலி நேற்று முறியடித்தார். கோலி சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.