இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

விராட் கோலி நீக்கப்பட்டு இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-08 14:48 GMT

மும்பை 

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிக்கும்  இந்திய அணியின்  கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . சமீபத்தில் விராட் கோலி டி20  பதவியிலிருந்து விலகிய நிலையில் இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில்   ரோகித் சர்மா  இந்திய அணியின் புதிய ஒரு நாள் போட்டி கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு  ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது (பிசிசிஐ ).

மேலும் செய்திகள்