தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் : விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ தகவல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகினார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.