கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு

கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-12 23:30 GMT
புதுடெல்லி,

டெஸ்ட் தொடர் முடிந்ததும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது. 

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அதை கருத்தில் கொண்டு நவ்தீப் சைனி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்