வெங்கடேஷ் ஐயர் டி20 போட்டிக்கு மட்டுமே தேவை: கவுதம் கம்பீர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

Update: 2022-01-25 16:55 GMT
கோப்புப்படம்

டெல்லி,

ஐ.பி.எல். தொடரில் சிறப்பான விளையாடிதன் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் ஐயர். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் 3-வது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். 2-வது போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்த போதிலும், விக்கெட் வீழ்த்தவில்லை.

இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் குறித்து கவுதம் கம்பீர் கூறும்போது,

வெங்கடேஷ் ஐயர் டி20 போட்டிக்கு மட்டுமே தேவை என உணர்கிறேன். ஏனென்றால், ஒருநாள் போட்டிக்கு ஏற்ற வகையில் அவருக்கு இன்னும் அனுபவம் இல்லை. ஐ.பி.எல்-லில் குறைந்த போட்டிகளில் விளையாடியதை வைத்து அவருக்கு சர்வதேச போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவரை டி20 போட்டியில் தான் விளையாட வைக்க வேண்டும். ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்து. ஐ.பி.எல் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல இந்திய அணி அவருக்கு டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை அளிக்கலாம். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.

மேலும் செய்திகள்