ஐ.பி.எல்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்

25 இன்னிங்சில் விளையாடி சாய் சுதர்சன் 1,000 ரன்களை கடந்துள்ளார்.

Update: 2024-05-10 16:26 GMT

அகமதாபாத்,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் , டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக ஆடிய இருவரும் சதமடித்தது அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் 55 பந்துகளில் 104 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார் .இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதல் ஐ.பி.எல். சதமடித்த சாய் சுதர்சன் ஐ.பி.எல் தொடரில் 1,000 ரன்களை கடந்தார் . வெறும் 25 இன்னிங்சில் மட்டும் விளையாடி அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார். இதனால் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன் 31 இன்னிங்சில் விளையாடி 1,000 ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்