உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-10-07 13:04 GMT

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதி வருகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்மழை பொழிந்தது. குயிண்டன் டாக் (100 ரன்கள்), வாண்டர் உசேன் (108 ரன்கள்) ஏய்டென் மார்கரம் (106 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்