டி20 கிரிக்கெட்; டவ்ஹித் ஹ்ரிடோய் அரைசதம்...வங்காளதேசம் 165 ரன்கள் சேர்ப்பு

ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-05-07 11:07 GMT

Image Courtesy: AFP

சட்டோகிராம்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2-0 என வங்காளதேச் அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றுன் தன்சி ஹசன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் லிட்டன் தாஸ் 12 ரன்னிலும், தன்சித் ஹசன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஷாண்டோ 6 ரன்னில் அவுட் ஆனார். இதனால் வங்காளதேச அணி 60 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து டவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் டவ்ஹித் ஹ்ரிடோய் அரைசதம் அடித்த நிலையில் 57 ரன்னிலும், ஜாக்கர் அலி 44 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து மஹ்முதுல்லாஹ் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹ்ரிடோய் 57 ரன்னும், ஜாக்கர் அலி 44 ரன்னும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்