டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.

Update: 2023-07-02 15:43 GMT

image courtesy: TNPL twitter

நெல்லை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் பால்சி திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மதன் குமார் மற்றும் சந்தோஷ் ஷிவ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

18-வது ஓவரில் சிபி மற்றும் சசிதேவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். சசிதேவ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்