ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் சல்மான்கான், கத்ரினா கைப் நடனம்

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வருகிற 17–ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

Update: 2017-11-07 21:30 GMT

கொச்சி,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வருகிற 17–ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 95 ஆட்டங்கள் நடக்கிறது. 17–ந்தேதி கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் மோதுகின்றன. அதற்கு முன்பாக இரவு 7.15 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா அரங்கேறுகிறது. இதில் இந்தி நடிகர் சல்மான்கான், நடிகை கத்ரினா கைப் ஆகியோர் கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடி ரசிகர்களை குதூகலப்படுத்த இருப்பதாக ஐ.எஸ்.எல். நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்