ஐ.எஸ்.எல். கால்பந்து புனே-பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் புனே-பெங்களூரு ஆட்டம் டிரா ஆனது.

Update: 2018-03-07 21:45 GMT
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய அரைஇறுதியின் முதலாவது சுற்றில் புனே சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணி தரப்பிலும் யாரும் கோல் போடாததால் டிராவில் (0-0) முடிந்தது. அரைஇறுதியின் 2-வது சுற்றில் 11-ந்தேதி இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதும். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

மேலும் செய்திகள்