ஐ.எஸ்.எல் கால்பந்து :வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று : மோகன் பகான் - ஒடிசா போட்டி ரத்து

மோகன் பாகான் - ஒடிசா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறவிருந்தது.

Update: 2022-01-08 10:17 GMT
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் ஏ.டி.கே மோகன் பாகான் - ஒடிசா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறவிருந்தது.

இந்நிலையில்  மோகன் பாகான் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து  செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆட்டம் பின்னர் வேறு ஒரு தேதியில்  நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது . 

மேலும் செய்திகள்