ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; பஞ்சாப் - ஐதராபாத் ஆட்டம் டிரா...!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் மோதின.

Update: 2023-11-08 01:08 GMT

Image Courtesy: @IndSuperLeague

டெல்லி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - ஐதராபாத் அணிகள் மோதின.

முதல் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பஞ்சாப் தரப்பில் ஜுவான் மேராவும், ஐதராபாத் தரப்பில் ஜோனதான் மோயாவும் கோல் அடித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்