ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பஞ்சாப்...

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-27 16:39 GMT

Image Tweet : @IndSuperLeague

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஐதராபாத் அணி வீரர்கள் போராடியும் பதில் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்