ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணிக்கு 5-வது இடம்

இந்த தொடரில் இந்திய அணி காலிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது.

Update: 2024-01-31 16:06 GMT

image courtesy; twitter/@TheHockeyIndia

மஸ்கட்,

முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 நாடுகள் பங்கேற்றிருந்த நிலையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.

காலிறுதியில் இந்திய அணி நெதர்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-7 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய அணி 5-8 இடங்களுக்கான ஆட்டங்களில் விளையாடியது. இதில் இந்திய அணி முதலில் கென்யாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் எகிப்துடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி தரப்பில் மனிந்தர் சிங் 2 கோல்களும், ரஹீல் முகமது, ராஜ்பார் பவன், மோர் மந்தீப் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்