சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-06-12 22:30 GMT
சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆர்.அர்ஜூன் துரை தலைவராகவும், ஏ.கே.சித்திரைபாண்டியன் பொதுச்செயலாளராகவும், ஏ.பழனியப்பன் பொருளாளராகவும், எஸ்.என்.ஜெயமுருகன் சேர்மனாகவும், எஸ்.ஆர்.சீனிவாசன் இணை சேர்மனாகவும், சரண்வேல், ராஜன், பி.ஜெகதீசன் ஆகியோர் செயல் துணைத்தலைவர்களாகவும், உபைதுர் ரகுமான், ஏ.தினகரன், பி.பாலச்சந்திரன் எம்.பி.செல்வகணேஷ், கோகலே ஆகியோர் துணை சேர்மன்களாகவும், ஆர்.சீனிவாசன், அப்தாபுதீன், ஜோன்ஸ் பெர்லிங் ராஜா ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஸ்ரீகேசவன் அசோசியேட் செயலாளராகவும், ரத்னகுமார், ஆல்பர்ட் தம்பிராஜ், முத்துராஜ் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், தினகரன், ஜலால் முகைதீன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்