இந்தியா ஓபன் பேட்மிண்டன்; சாத்விக் - சிராக் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சியோ- காங் இணை

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ- எம்.எச். காங் இணையை எதிர்கொண்டது.

Update: 2024-01-21 12:29 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாளான இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ - எம்.எச். காங் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 2வது செட்டில் 11-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற கடைசி செட்டில் 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தி தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ - எம்.எச். காங் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

Tags:    

மேலும் செய்திகள்