சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை

சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கனேமத் ஷெகான் தேசிய சாதனை படைத்து உள்ளார்.

Update: 2023-07-13 01:21 GMT

லொனேட்டோ,

சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2023 போட்டிகள் இத்தாலி நாட்டில் நடந்து வருகின்றன. இதில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கனேமத் ஷெகான் கலந்து கொண்டார்.

அவர் போட்டியின்போது, தேசிய சாதனை படைத்து உள்ளார். முதல் 6 இடங்களுக்குள் வராமல் 7-வது இடம் பிடித்த அவர், பதக்கம் பெற தவறினார். போட்டியில், ஒரு முறை துப்பாக்கியால் சுடுதலில் சரியாக 25 புள்ளிகளை எடுத்து சாதனை படைத்து உள்ளார்.

இதேபோன்று, அவர் தகுதி சுற்று போட்டியில் 120 புள்ளிகளை சேர்த்து உள்ளார். கடந்த மே மாதம் அல்மேட்டியில் நடந்த சர்வதேச உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிர் தனிநபர் ஸ்கீட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில், அமெரிக்காவின் டேனியா ஜோ விஜ்ஜி தங்க பதக்கமும், சக வீராங்கனையான சமந்தா சிமோன்டன் வெள்ளி பதக்கமும், சீனாவின் ஜியாங் யிடிங் வெண்கல பதக்கமும் வென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்