சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல் என தகவல்

Update: 2023-04-20 06:48 GMT

போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ள நிலையில் உம்துர்மன் பகுதியில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்