’அவரை அப்பா மாதிரி நினைத்தேன்...ஆனால்’ - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

ஒரு இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.;

Update:2025-12-21 12:12 IST

சென்னை,

திரையுலகில் அவ்வப்போது "காஸ்டிங் கவுச்" என்ற வார்த்தையைக் கேள்விப்படுகிறோம். நடிகைகளாக வேண்டும் என்று விரும்பிய பல பெண்கள் இதனை சந்தித்திருக்கிறார்கள். பல நேர்காணல்களில், சில கதாநாயகிகள் அதை பகிர்ந்து கொண்டனர்.

சமீபத்தில், ஒரு கதாநாயகி தென்னிந்திய இயக்குனரைப் பற்றி பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தானும் காஸ்டிங் கவுச்சால் பாதிக்கப்பட்டதாக கூறினார். அவர் வேறு யாரும் இல்லை மால்தி சாஹர்தான்.

ஒரு இயக்குனர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார். அவரை தனது தந்தைபோல நினைத்ததாகவும் ஆனால் அவர் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதாகவும் மால்தி தனது கசப்பான அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

மால்தி சாஹர்.. 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அனில் சர்மா இயக்கிய ஜீனியஸ் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் நுழைந்தார். அதில் ரூபினா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, 2022 ஆம் ஆண்டு இஷ்க் பஷ்மினா திரைப்படத்தின் மூலம் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. தற்போது, அவர் விளம்பரங்களில் நடித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்