’என் இதயத்தில் அந்த படம் எப்போதும் இருக்கும் ‘- கயாடு லோகர்
கயாடு தற்போது 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.;
சென்னை,
டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகை கயாடு லோகர், சமீபத்தில் ’யே மாயா சேசாவே’ என்ற கிளாசிக் படத்தை பற்றி பேசினார்.
சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்வில், பேசிய கயாடு, ’யே மாயா சேசாவே’ படத்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் தனது இதயத்தில் ஒரு சிறப்பு இடம் இதற்கு உள்ளதாகவும் கயாடு தெரிவித்தார்.
கவுதம் மேனன் இயக்கிய யே மாயா சேசாவே படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்திருந்தனர். கயாடு தற்போது 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.