“தி ராஜா சாப்” படப்பிடிப்பை முடித்த பிரபாஸ்...வைரலாகும் இயக்குனரின் பதிவு
“தி ராஜா சாப்” படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “தி ராஜா சாப்” படத்தின் படப்பிடிப்பு இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. இயக்குனர் மாருதி சமூக ஊடகங்களில் ஒரு புதிய போஸ்டரைப் பகிர்ந்து பிரபாஸ் படப்பிடிப்பை முடித்ததாக அறிவித்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், , “23 ஆண்டுகளுக்கு முன்பு, பிரபாஸ் சினிமாவில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். இன்று, அதே நாளில் “தி ராஜா சாப்” இல் தனது பயணத்தை முடிக்கிறார். அவரது வெற்றிகரமான பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோருடன் பிரபாஸ் நடித்துள்ள இந்த திகில்-காமெடி படத்தில் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள “தி ராஜா சாப்” படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.