வைகாசி அமாவாசை: தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-05-27 12:47 IST

தர்மபுரி எஸ்.வி,ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது . இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் வைகாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்